நாக சைதன்யா மனிதனாக நடந்து கொள்ளவில்லை -போராடிய சமந்தா!

Samantha Naga Chaitanya Divorce
By Vidhya Senthil Aug 10, 2024 08:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

 தெலுங்கு நடிகர் நாக சைதன்யா -நடிகை சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், பதித்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாக சைதன்யா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருவபர் நாக சைதன்யா . இவருக்கென சிறியவர் முதல் பெரியவர் வரை தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நாக சைதன்யா மனிதனாக நடந்து கொள்ளவில்லை -போராடிய சமந்தா! | Cheyyaru Balu Talks About Chaitanya Engagement

ஆனால் 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். ஆனால் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி உலா வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நடிகர் நாகர்ஜூனா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்திருந்தார்.

சமந்தாவை பிரிந்ததற்கு காரணம் இதுதான் - மனம் திறந்த நாக சைதன்யா!

சமந்தாவை பிரிந்ததற்கு காரணம் இதுதான் - மனம் திறந்த நாக சைதன்யா!

செய்யாறு பாலு  

இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பலரும் நாக சைதன்யா மற்றும் சோபிதாவுக்கு வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் கூறி வருகின்றனர்.

நாக சைதன்யா மனிதனாக நடந்து கொள்ளவில்லை -போராடிய சமந்தா! | Cheyyaru Balu Talks About Chaitanya Engagement

நாக சைதன்யா திருமணம் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில்,'' ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சினிமா பின்னணி எதுவுமே இல்லாமல் நடிகை சமந்தா வெற்றி பெற்றதற்க்கு காரணம் அவரின் உழைப்பு தான். நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்த போது சமந்தா குறித்து மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாது அரியவகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு நோயுடன் போராடிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நாகசைத்தன்யா இப்படி நடந்து கொள்ளலாமா, அவர் ஒரு சக மனிதனாக நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். 

     (மேலும் நாக சைதன்யா குறித்து குறித்து செய்யாறு பாலு பேசிய சொந்த கருத்தாகும் .இதற்க்கு ibc தமிழ்நாடு ஒருபோதும் பொறுப்பேற்காது.)