‘சென்னை பயணத்தை மறக்க முடியாது’ - டுவிட்டரில் வீடியோ பதிவிட்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சி..!
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேற்று மாலை 5 மணியிலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆடல், பாடல் என்று செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நேற்று களைகட்டியது.
நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஸ்வநாதன் ஆனந்த் வழங்க, அதை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்தார்.
பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை நிகழ்த்தினார். வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார். இருந்தோம்பி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
இதனையடுத்து, இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிகளை முடித்து பிரதமர் மோடி சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது என்று நெகிழ்ச்சி பதிவை குறிப்பிட்டு, சென்னை சுற்றுப்பயண வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Memories from Chennai!
— Narendra Modi (@narendramodi) July 29, 2022
Thank you for an unforgettable visit. pic.twitter.com/RDmFDbiZhN