செஸ் ஒலிம்பியாட் போட்டி; தமிழக அரசின் ஏற்பாடுகளுக்கு பாராட்டு குவிகிறது - அமைச்சர் மெய்யநாதன்

Chess Tamil nadu 44th Chess Olympiad
By Nandhini Jul 29, 2022 08:47 AM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தமிழக அரசின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டுகள் குவிந்து வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் மெய்யநாதன் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சதுரங்கத்தை குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறோம். 4 ஆண்டுகளில் செய்ய வேண்டிய செஸ் ஒலிம்பியாட் பணிகளை 4 மாதங்களில் தமிழக அரசு செய்துள்ளது. தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர். பல அரசியல் தலைவர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துக்கொண்டிருக்கிறது என்றார்.   

Meyyanathan