துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் உடல் - கொலையின் பின்னணி என்ன?

Tamil nadu Chennai
By Karthikraja Sep 19, 2024 06:27 AM GMT
Report

சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் உடல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூட்கேசில் உடல்

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. 

thoraipakkam suitcase

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. 

பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ அதிகாரி - பிறப்புறுப்பில் கண்ணாடியை திணிக்க முயன்ற கொடூரம்

பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ அதிகாரி - பிறப்புறுப்பில் கண்ணாடியை திணிக்க முயன்ற கொடூரம்

விசாரணை

இதை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக பெண் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடல் பாகங்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா வைத்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் சென்னை மணலி பகுதியை சேர்ந்த தீபா (30) என்பது தெரிய வந்துள்ளது. 

thuraipakkam police investigate suitcase

இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன்(25) கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்திய விசாரணையில், தீபா பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். மணிகண்டன் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பாலியல் தொழிலில் ஈடுபட தீபா மணிகண்டனிடன் அதிக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரை சுத்தியலால் அடித்து கொன்று விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிச் சென்றுள்ளார்.