பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ அதிகாரி - பிறப்புறுப்பில் கண்ணாடியை திணிக்க முயன்ற கொடூரம்
ராணுவ அதிகாரிபெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராணுவ அதிகாரி
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர் நகரில் AB சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சஞ்சய் யாதவ் என்ற ராணுவ அதிகாரி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 35 வயதான பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் ஒரு வருடம் முன் மோவ் பகுதியில் பணியில் இருந்தபோது கேன்டீன் அட்டை தந்து உதவியபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பாலியல் வன்கொடுமை
அதன் பின் அசாமுக்கு மாறுதலாகி சென்ற அவர், விடுமுறையில் வந்தபோது இந்தோர் நகரில் உள்ள ஹோட்டலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அங்கு சென்ற போது என்னை ஹோட்டல் அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் என்னுடைய பிறப்புறுப்பில் கண்ணாடி துண்டை சொருக முயன்றார் என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவை கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.