சென்னை டெஸ்ட்: ரோஹி்த் சர்மா சதமடித்தார்

india cricket match kholi
By Jon Feb 14, 2021 03:56 AM GMT
Report

இந்தியா- இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்திய அணி 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது. இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது.

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார், தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ஸ்டோன் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் சுப்மன் கில் 'டக்' அவுட்டானார். ரோகித்துடன் இணைந்தார் புஜாரா. இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் சீராக உயர்ந்தது.

ஸ்டோக்ஸ் வீசிய 12வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், லீச் பந்துகளையும் விட்டு வைக்கவில்லை. இவர் 47 வது பந்தில் தனது 12வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த போது, லீச் சுழலில் புஜாரா (21) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி, மொயீன் அலி சுழலில் ரன் கணக்கை துவக்காமல் போல்டாக, ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோகித் சர்மா, மொயீன் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். மொயீன் பந்தில் இரண்டு ரன் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 7வது சதம் அடித்தார் ரோகித் சர்மா. இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.