சென்னை டெஸ்ட்: அஸ்வின் சதம், இங்கிலாந்துக்கு 482 ரன்கள் இலக்கு

india icc england kholi
By Jon Feb 15, 2021 12:24 PM GMT
Report

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 482 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்களும், இங்கிலாந்து 134 ரன்களும் எடுத்தன. 195 ரன்கள் முன்னிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதால் இந்திய பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் திணறினார்கள்.

ஒரு கட்டத்தில் இந்தியா 106 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. 7வது விக்கெட்டுக்கு, கோஹ்லியுடன் இணைந்தார் அஸ்வின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் கடந்தனர். கோஹ்லி 62 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மொயீன் அலி பந்துவீச்சில் LBW முறையில் அவுட்டானதால் அந்த பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது.

அடுத்து வந்த குல்தீப்பும், இஷாந்த் சர்மாவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அஸ்வின் சதமடித்து அசத்தினார். முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 85.5 ஓவர்களில் 286 ரன்களை குவித்தது, இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு ரன்கள் 482 இலக்காக நிர்ணயித்துள்ளது.