தொடரும் கனமழை - பள்ளி கல்லூரிகளுடன் அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

Kanchipuram Chennai TN Weather Chengalpattu Thiruvallur
By Karthikraja Oct 15, 2024 11:06 AM GMT
Report

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து உள்ளது. நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

chennai rain

இதனையடுத்து சென்னைக்கு இன்று(15.10.2024) கொடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு அலெர்ட் ரெட் அலெர்டாக மாற்றப்பட்டுள்ளது. முன்னதாகவே நாளைக்கு (16.10.2024) ரெட் அலெர்ட் வழங்கப்பட்டிருந்தது. 

சென்னை கனமழையால் மின் தடையா? உதவி எண்களை அறிவித்த மின்சார வாரியம்

சென்னை கனமழையால் மின் தடையா? உதவி எண்களை அறிவித்த மின்சார வாரியம்

விடுமுறை

இந்நிலையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

chennai rain school college holiday

இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த மாவட்டங்களில் செயல்படும் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நாளை(16.10.2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.