சென்னையில் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் தொடர் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதலில் இப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது 50 சதவிகித ரசிகர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை மைதானத்தில் 38 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.
தற்போது 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் மூலம் போட்டி நடைபெறும் நாள்களில் தினந்தோறும் 19 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதனிடையே, இருநாட்டு வீரர்களும் இன்றுமுதல் தீவிர வலைப்பயிற்சியை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் ஏர் லைன்ஸ்: தற்போதைய நிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு IBC Tamil
