ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்

csk ipl bowler Hazlewood
By Jon Apr 01, 2021 02:16 PM GMT
Report

ஐபிஎல் தொடரில் இருந்து விலையாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி அடுத்த மதம் மே 30ம் தேதி வரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன.

இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேஷ் ஹேசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர், இன்னும் சிலநாட்களில் இந்தியாவுக்கு வந்து சென்னை அணியுடன் இணைந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் | Chennai Fast Bowler Withdraws Ipl Series

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் அடுத்த 2 மாதங்களுக்கு குடும்பத்துடன் சற்று ஓய்வெடுக்க விரும்புவதாக ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

மேலும் டி 20 உலகக்கோப்பை தொடர், ஆஷிஸ் தொடர் உள்ளிட்ட போட்டிகளை கருத்தில் கொண்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக இந்த ஓய்வு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு மாற்று வீரரை தற்போது சென்னை அணி தேடி வருகிறது.