சென்னை 2வது டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடந்து முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் மத்திய அரசின் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. ஆன்லைனில் டிக்கெட் விற்பனை வருகிற 9ம் தேதி தொடங்கவிருக்கிறது, சுமார் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மைதானத்துக்கு போட்டியை காண வருகை தரும் ரசிகர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.