சென்னையில் ஐபிஎல் ஏலம்: மொத்தம் 1097 வீரர்கள் பதிவு

csk rcb mi srh
By Jon Feb 08, 2021 05:31 AM GMT
Report

வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் 18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. ஐபிஎல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள் விபரம் மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள், ஆஸ்திரேலியா - 42 வீரர்கள், தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், இங்கிலாந்து - 21 வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள், நேபாளம் - 8 வீரர்கள், ஸ்காட்லாந்து- 7 வீரர்கள், வங்காளதேசம் - 5 வீரர்கள், அயர்லாந்து - 2 வீரர்கள், அமெரிக்கா - 2 வீரர்கள், ஜிம்பாப்வே- 2 வீரர்கள், நெதர்லாந்து - 1 வீரர்.