ராஜினாமா இல்லை..3 நாளுக்கு முன்னாடியே நீக்கிட்டோம்..சந்திரபிரியங்கா சர்ச்சை..சபாநாயகர் புது ட்விஸ்ட்!!
சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியிலிருந்து 3 நாட்களுக்கு முன்பாகவே நீக்கப்பட்டுவிட்டார் என புதுச்சேரி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சந்திர பிரியங்கா
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு (தனி) சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சந்திர பிரியங்கா (33). வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார் சந்திர பிரியங்கா.
ராஜினாமா
இதுகுறித்து சந்திர பிரியங்கா தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் ராஜினாமா கடிதத்தில் "என்னைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் வலையில் சிக்கியிருக்கும் நிலையில், நான் இந்தக் கடிதத்தினை வெளியிட்டிருந்தார்.
அதில், தான் சாதிய, பாலியல் ரீதியாக பாகுபாடாக நடத்தப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
ஏற்கனவே பதவி நீக்கம் செய்தாச்சு
இந்நிலையில், இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புதுச்சேரி சபாநாயகர், சந்திரபிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து 3 நாட்களுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டார் என தெரிவித்தார்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட துறையை அவர் சரிவர நிர்வகிக்காத காரணத்தால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என அவர் காரணமும் தெரிவித்து மேலும் அவரது நீக்கம் குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.