'சந்திரயான் 3' நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை - பகீர் கிளப்பும் விஞ்ஞானி!

China India ISRO Chandrayaan-3
By Jiyath Sep 29, 2023 04:08 AM GMT
Report

சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை என சீன விஞ்ஞானி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 23ம் விக்ரம் லேண்டரைவெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சரித்திர சாதனை படைத்தது இஸ்ரோ (ISRO).

நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் 12 நாட்கள் பல ஆய்வுகளையும் மேற்கொண்டது. இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து நிலவின் தென் துருவத்தில் இரவு சூழல் வந்ததால், ரோவர் மற்றும் லேண்டர் காலங்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையா நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

ஆனால் உறக்கத்துக்கு பிறகு மீண்டும் விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தென் துருவத்தில் இல்லை

இந்நிலையில் சந்திரயான் 3 தரையிறங்கியது நிலவின் தென் துருவத்தில் இல்லை என்று 'சீன சந்திர ஆய்வு திட்டத்தின்' தந்தை என அழைக்கப்படும் மூத்த விஞ்ஞானியான 'உயான் ஜியூன்' விமர்சித்துள்ளார்.

மேலும், சந்திரயான் 3 திட்டம் மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார். அதில் "பூமியில், தென் துருவமானது 66.5 மற்றும் 90 டிகிரி தெற்கே வரையறுக்கப்படுகிறது, ஏனெனில் அதன் சுழற்சி அச்சு சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது. சந்திரனின் சாய்வு 1.5 டிகிரி மட்டுமே என்பதால், துருவப் பகுதி மிகவும் சிறியதாக இருக்கும். எனவே, சந்திரயான்-3 தரையிறங்கும் தளம் நிலவின் தென் துருவத்தில் இல்லை, நிலவின் தென் துருவத்தின் துருவப் பகுதியில் இல்லை’’ என விஞ்ஞானி கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.