ஏழை மக்கள் வீடு தேடி சென்று உதவிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...நெகிழ்ச்சி தருணம்!

Andhra Pradesh N. Chandrababu Naidu
By Swetha Jul 02, 2024 10:22 AM GMT
Report

முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.4000 வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.

சந்திரபாபு நாயுடு..

ஆந்திர மாநிலத்தில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். ஒவ்வொரு மதமும் வீடுகளுக்கே உதவி தொகை வழங்கப்படும் என்று உத்தரவும் அளித்தார்.

ஏழை மக்கள் வீடு தேடி சென்று உதவிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...நெகிழ்ச்சி தருணம்! | Chandrababu Naidu Went To Find A House And Had Tea

இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது குண்டூர் மாவட்டம் மங்களகிரி பகுதியில் ஒரே வீட்டில் முதியவரும் அவருடைய விதவை மகளும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவரது வீட்டுக்கு சந்திரபாபு நாயுடு வருகை தந்திருந்தார். அந்த வீட்டினர் முதல்வரை வரவேற்று டீ கொடுத்தனர்.

ஜெயித்து 5 நாள் தான் ஆனது..ரூ.579 கோடி சம்பாதித்த சந்திரபாபு நாயுடு மனைவி - அது எப்படி?

ஜெயித்து 5 நாள் தான் ஆனது..ரூ.579 கோடி சம்பாதித்த சந்திரபாபு நாயுடு மனைவி - அது எப்படி?

நெகிழ்ச்சி தருணம்

அதை வாங்கி குடித்த சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். அப்போது அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும் ஏழ்மை காரணமாக வீடு கட்ட முடியவில்லை எனவே வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஏழை மக்கள் வீடு தேடி சென்று உதவிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...நெகிழ்ச்சி தருணம்! | Chandrababu Naidu Went To Find A House And Had Tea

இதனை கேட்ட சந்திரபாபு நாயுடு 3.8 சென்ட் நிலத்தில் வீடு கட்டி தரப்படும் என உறுதி அளித்தார். அதே சமயத்தில் முதியவரின் மகளின் 2 மகன்கள் தந்தையை இழந்த சோகத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அந்த இரண்டு சிறுவர்களையும் முதல்வர் அரவணைத்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுடைய கல்விச் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்தார். இதனை கேட்டதும் அவர்கள் கண்ணீர் மல்க சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவித்தனர்.