தேர்தலில் போட்டியிட 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் - அரசின் புதிய திட்டம்

Andhra Pradesh Election N. Chandrababu Naidu
By Karthikraja Oct 20, 2024 04:30 PM GMT
Report

அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை பெருக்கம்

இந்தியா உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் உள்ள நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

சந்திரபாபு நாயுடு

இந்நிலையில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

69 குழந்தைகளை பெற்று சாதனை படைத்த பெண் - எத்தனை வருடங்கள் கர்ப்பமாக இருந்தார் தெரியுமா?

69 குழந்தைகளை பெற்று சாதனை படைத்த பெண் - எத்தனை வருடங்கள் கர்ப்பமாக இருந்தார் தெரியுமா?

சந்திரபாபு நாயுடு

அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் முதியர்கள் தான் அதிகம் உள்ளனர். 

சந்திரபாபு நாயுடு

இளைஞர்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விடுகின்றனர். தேசிய அளவில் கறுவுறுதல் வீதம் 2.1 ஆக உள்ள நிலையில் தென்னிந்தியாவில் 1.6 சதவீதம் மட்டுமே கறுவுறுதல் நடைபெறுகிறது. இப்படியே சென்றால் 2047ம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.

தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு

ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் ஏற்கனவே முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொருளாதார சுமையுடன் சிக்கித் தவிக்கின்றன. முன்பு எனது ஆட்சியின்போது அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினேன். நீங்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையை குறைத்தீர்கள்.

முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை நான் அமல்படுத்தி இருந்தேன். தற்போது அந்த சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் என புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம். அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கக்கூடும்" என பேசியுள்ளார்.