வெளுக்கப்போகுது கனமழை; இந்த 4 மாவட்டங்களில் மக்களே கவனம் - எச்சரிக்கை!

Tamil nadu TN Weather
By Sumathi May 22, 2024 04:00 AM GMT
Report

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியுள்ளது. இது 24-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

வெளுக்கப்போகுது கனமழை; இந்த 4 மாவட்டங்களில் மக்களே கவனம் - எச்சரிக்கை! | Chance Of Heavy Rain In 4 District Tamil Nadu

அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை ஆரஞ்சு அலர்ட்...கொட்டப்போகும் கனமழை!! சென்னை வானிலை எப்படி..?

நாளை ஆரஞ்சு அலர்ட்...கொட்டப்போகும் கனமழை!! சென்னை வானிலை எப்படி..?


கனமழை எச்சரிக்கை

மேலும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை(23.5.24) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெளுக்கப்போகுது கனமழை; இந்த 4 மாவட்டங்களில் மக்களே கவனம் - எச்சரிக்கை! | Chance Of Heavy Rain In 4 District Tamil Nadu

பின்னர், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 25-ந் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இன்று ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.