விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரியா? மத்திய அரசு விளக்கம்
விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
விவசாய நீருக்கு வரியா?
நாடு முழுவதும் ஆண்டுதோறும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த நீரில் 23,913 கோடி கன மீட்டர், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த நிலத்தடி நீர் பயன்பாட்டு அளவில், 83 சதவீதமாக உள்ளது.
நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதையும், தண்ணீர் வீணாக்கப்படுவதையும் தடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதற்கு, விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மத்திய அரசு மறுப்பு
Several social media posts claim that the Union Government is planning to impose a tax on water usage for agricultural purposes #PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) June 27, 2025
❌ This Claim is #Fake
✅ Union Jal Shakti Minister @CRPaatil has clarified in a press conference that water usage for farming falls… pic.twitter.com/FqyT0VWAKd
இந்நிலையில், விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டில் விளக்கமளித்துள்ளார்.