அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு!

India Syria
By Sumathi Dec 07, 2024 11:45 AM GMT
Report

சிரியாவிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு போர் 

சிரியாவில் அதிபர் அல்-அஸாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது.

syria

அதன்படி கிளர்ச்சிப் படைகள், கடந்த ஒரு வாரமாக, சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தை அகற்றும் நோக்கில், தாக்குதலை நடத்தி வருகின்றன.

இவர்களுக்கு இலவச பாஸ்போர்ட்; காசு கட்ட வேண்டாம் - யாருக்கு தெரியுமா?

இவர்களுக்கு இலவச பாஸ்போர்ட்; காசு கட்ட வேண்டாம் - யாருக்கு தெரியுமா?

மத்திய அரசு உத்தரவு

மேலும், அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எனவே அங்குள்ள மக்கள் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

india - syria

வெளியேற முடியாதவர்கள், அந்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு இந்திய வெளியேறவுத்துறை தெரிவித்துள்ளது. டமாஸ்கசில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு பிரத்யேக தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

+963993385973 என்ற அவசர கால உதவி எண் மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.