நள்ளிரவில் நிர்வாணமாக வந்து மான் இறைச்சியை சாப்பிட்ட 2 பெண்கள் - பகீர் சிசிடிவி காட்சி
இரு பெண்கள் நிர்வாணமாக வலம் வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான் இறைச்சி
36 வயது பெண் கொரினியா ஸ்டான்ஹோப். இவர் தனது தோட்டத்தில் இறந்த மானை கண்டுள்ளார். அதனை புதைக்காமல் தோட்டத்தின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அருகே ஒரு கேமராவையும் வைத்துள்ளார்.
காட்டு மிருகம் மானை சாப்பிட வரும்போது அதை வீடியோ எடுக்கலாம் என நினைத்துள்ளார். வழக்கம்ப்போல் கேமராவை ஆன் செய்துவைத்து விட்டு அந்தப்பெண் தூங்கச் சென்றுள்ளார். அடுத்த நாள் சிசிடிவி காட்சியை பார்த்தபோது,
சிசிடிவி காட்சி
அதில் நிர்வாணமான பெண்கள் நீண்ட தலைமுடியுடன் அந்த மான் இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் போலீஸில் புகாரளித்துள்ளார்.
இரண்டு பெண்களின் முகம் முடியால் மூடப்பட்டிருப்பதால் அவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்துள்ளது. தொடர்ந்து வீடியோ உண்மையா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது வெளியாகி வருகிறது.