பிரபல நடிகை ஆண் நண்பர்களுடன் நெருக்கம் - போட்டி போட்டுக்கொண்டு புகார்!
நடிகை பார்வதி நாயர், வீட்டு வேலைக்காரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பார்வதி நாயர்
சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் வசிப்பவர் நடிகை பார்வதி நாயர். இவரது வீட்டு வேலைக்காரர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் மீது கடந்த நவம்பர் மாதம் பார்வதி நாயர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதில் தன் வீட்டில் இருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் திருடுப்போனதாகவும், அவற்றை வீட்டு வேலைக்காரர் திருடியதாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து, தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், போலீசார் ஒரு தலை பட்சமாக விசாரணை நடத்துவதாகவும் சுபாஷ் சந்திர போஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகாரளித்தார்.
வழக்குப்பதிவு
இந்நிலையில், நடிகை, சுபாஷ் சந்திர போஸ் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். சமூக வலைத்தளங்களில், யூடியூப் சேனல்களில், சுபாஷ் சந்திரபோஸ் பேட்டி என்ற பெயரில், என் கெரியரை பாழாக்கி வருகிறார்.
ஆண் நண்பர்களுடன் நான் நெருக்கமாக இருந்ததாகவும், அதை பார்த்து விட்டதால் தான் சுபார் சந்திர போஸ் மீது நான் பொய் புகார் தந்ததாகவும் கூறி வருகிறார்.
அதன்படி, கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சடத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்ணிற்கு களங்கம் கற்பிப்பது என மூன்று பிரிவுகளின் கீழ் சுபாஷ் சந்திர போஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.