ஊழியருக்கு வன்கொடுமை - பிரபல நடிகை மீது பகீர் புகார்!

Chennai Indian Actress
By Sumathi Nov 12, 2022 06:18 AM GMT
Report

நடிகை பார்வதி நாயர் மீது வீட்டு வேலைக்காரர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 பார்வதி நாயர் 

சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடிகை பார்வதி நாயர். தமிழைல் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிந்தார்.

ஊழியருக்கு வன்கொடுமை - பிரபல நடிகை மீது பகீர் புகார்! | Complaint Against Actress Parvathy Nair In Chennai

இந்நிலையில், அவரது வீட்டில் இருந்த சில பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டது. அதில் விலையுயர்ந்த 2 கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோன், மடிக்கணினி ஆகியவை திருடுப்போனதாக பார்வதி நாயர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 பகீர் புகார்

இதில் தன் வீட்டில் வேலைப்பார்த்த முன்னாள் ஊழியர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், புதுக்கோட்டையச் சேர்ந்த முன்னாள் ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பார்வதி நாயர் வீட்டில் நான் வேலை பார்த்து வந்தேன். என்னை அடித்து துன்புறுத்தினார் என்றும் காரி கூட உமிழ்வார் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், அவரது வீட்டில் பொருட்கள் திருடு போயின. அந்த திருட்டு பழியை என் மீது சுமத்துகிறார். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே உண்மையை ஆராய்ந்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.