கருணாநிதி குறித்து அவதூறு..சீமான் மீது பாய்ந்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு!

M Karunanidhi Tamil nadu DMK Seeman
By Swetha Oct 14, 2024 03:00 PM GMT
Report

சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவதூறு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி குறித்து அவதூறு..சீமான் மீது பாய்ந்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு! | Case Filed Against Seeman For Controversial Speech

கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர், கரூர் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சீமான் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு - சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு - சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வழக்கு 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பட்டியல் ஜாதி குறித்து அவதூறாக

கருணாநிதி குறித்து அவதூறு..சீமான் மீது பாய்ந்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு! | Case Filed Against Seeman For Controversial Speech

பேசியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.