விதிமீறி பேனர் - பரிசு டோக்கன்...பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்த காரணம்..?
தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கட்சியினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
3 பிரிவுகளில்
சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் பிரேமலதா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தேமுதிக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தனது பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு இலவச தையல் பயிற்சிக்கான டோக்கன்களை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.