காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர் - பறிமுதல் செய்த போலீசார்!

Uttar Pradesh India
By Jiyath Mar 21, 2024 03:55 AM GMT
Report

ஹெலிகாப்டர் போல் வடிவமைக்கப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.   

ஹெலிகாப்டர் கார் 

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கஜோரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தனது காரை சுமார் ரூ.2.5 லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைத்துள்ளார்.

காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர் - பறிமுதல் செய்த போலீசார்! | Car Modified Like Helicopter Police Confiscate

இதனை திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகைக்கு விடும் எண்ணத்தில் அவர் வடிவமைத்துள்ளார். இந்நிலையில் அந்த காருக்கு பெயிண்ட் அடிப்பதற்காக சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த 4 நிறங்களில் சாலை மைல்கல் இருப்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இந்த 4 நிறங்களில் சாலை மைல்கல் இருப்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

பறிமுதல் 

அப்போது அந்த ஹெலிகாப்டர் மாடல் காரை பார்த்த போக்குவரத்து காவலர்கள், விதிகளை மீறி காரில் மாற்றங்கள் செய்ததாக கூறி ரூ.2,000 அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அபராதத்தை செலுத்திய பிறகு காரை விடுவித்துள்ளனர்.

காரை ஹெலிகாப்டராக மாற்றிய நபர் - பறிமுதல் செய்த போலீசார்! | Car Modified Like Helicopter Police Confiscate

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக காரை பறிமுதல் செய்ததாகவும், காரின் வடிவமைப்பை மாற்றுவதற்கு ஆர்டிஓவிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.