கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர விபத்து..2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி!

Tamil nadu Cuddalore Accident
By Swetha Sep 12, 2024 03:39 AM GMT
Report

கார் லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர விபத்து

சென்னையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நோக்கி 5 பேருடன் கார் சென்றுக்கொண்டிருந்தது. அந்த கார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர விபத்து..2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி! | Car Accident 5 People Spot Dead Near Cuddalore

அப்போது திடீரேன எதிரே வந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் அந்த் காரில் பயனித்த 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியில் அடியில் சிக்கி இருந்த காரை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

தற்காலிக ஓட்டுனரால் ஏற்பட்ட பயங்கர விபத்து - கடை - கார்களில் மோதி விபத்து

தற்காலிக ஓட்டுனரால் ஏற்பட்ட பயங்கர விபத்து - கடை - கார்களில் மோதி விபத்து

நடந்தது என்ன?

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாசர் அராபத்(40), முகமது அன்வர்(56), ஹாஜிதா பேகம்(62), சராபாத் நிஷா(30), அப்னான்(2) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, உயிரிழந்த 5 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர விபத்து..2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி! | Car Accident 5 People Spot Dead Near Cuddalore

இந்த விபத்து தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் அதிவேகத்தில் மயிலாடுதுறை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததா?

ஓட்டுனர்களின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.