தோனியின் முடிவு ...சென்னை அணியின் அடுத்த கேப்டன்..?காசி விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் அணியாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை அணி மீண்டும் ஒரு முறை கோப்பையை குறிவைத்துள்ளது.
சென்னை அணியின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். வரும் 22-ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.
கேப்டன் யார்
சென்னை அணியின் கேப்டனான தோனிக்கு வயது 42. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக அவர் ஓய்வு பெற்று விட்டாலும், இன்னும் சென்னை அணிக்காக மட்டும் விளையாடி வருகின்றார் தோனி.
அவருக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடர் என பல வருடங்களாக பேசப்பட்டு வரும் நிலையில், அவருக்கு அடுத்து சென்னை அணிக்கு கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றி பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் விட்டுவிடுங்கள் எனக்கூறினார்.
அவர்கள் முடிவு செய்து தகவல் சொன்ன பிறகு அதை உங்களிடம் தெரிவிக்கிறேன் என்ற அவர், அதுவரை அமைதியாக இருங்கள் என்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் நாக்-அவுட் சுற்றை எட்டுவது தான் முதல் இலக்குஎன்று தெரிவித்தார்.