பாத்ரூமுக்குள் கேமரா, மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த சக மாணவிகள் - குஷ்பு நேரில் விசாரணை
பெண்கள் கழிவறைக்குள், மொபைல் கேமரா இருந்த விவகாரம் குறித்து குஷ்பு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகா, அம்பலவாடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 3 மாணவிகள் சேர்ந்து அதே கல்லூரியில் படிக்கும் மாணவி கழிப்பறையில் இருக்கும் போது செல்போன் மூலம் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர்.\
மேலும் இந்த வீடியோவை கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களின் வாட்ஸாப் குழுவிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட 3 மாணவிகளை இடைநீக்கம் செய்தது. தொடர்ந்து வீடியோ இணையத்தில் பரவியதால் விவகாரம் வெடித்தது.
குஷ்பு விசாரணை
அதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 3 மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகளிர் ஆணையத் தலைவர் குஷ்பு கல்லூரிக்கு நேரில் சென்று மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார்.