இந்தியாவுக்கு தலைவலியை தரும் சீனா; இதுதான் ஆபத்தே - நிலவும் பதற்றம்!

China India
By Sumathi Aug 06, 2023 10:14 AM GMT
Report

சீனா தனது கடற்படையை பலப்படுத்தி வருவது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கடற்படை தளம் 

வெளிநாடுகளில் கடற்படை தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. தற்போது, சீனா ராணுவத்திற்கு சொந்தமாக ஒரே கடற்படை தளம் ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் அமைந்துள்ளது. முழுவதுமாக தயார் பணியில் வைக்கப்பட்டுள்ள

இந்தியாவுக்கு தலைவலியை தரும் சீனா; இதுதான் ஆபத்தே - நிலவும் பதற்றம்! | Cambodia Djibouti New China Built Port Details

ஜிபூட்டி கடற்படை தளத்தின் சாட்டிலைட் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனப் போர்க்கப்பல்களுக்கு உதவிடும் வகையில் மலாக்கா ஜலசந்தி அருகே இந்த கடற்படை தளம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆபத்து

இந்தியாவுக்கு சிக்கலை உண்டாக்கும் வகையில் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், , இந்தியப் பெருங்கடலையும் தென் சீனக் கடலையும் இணைக்கும் முக்கியமான சோதனைச் சாவடியாக மலாக்கா ஜலசந்தி உள்ளது. இது உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும்.

இந்தியாவுக்கு தலைவலியை தரும் சீனா; இதுதான் ஆபத்தே - நிலவும் பதற்றம்! | Cambodia Djibouti New China Built Port Details

ஒவ்வொரு ஆண்டும் உலக வர்த்தகத்தில் 25% இதன் வழியாக செல்கிறது. 350 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களுடன், சீன கடற்படை உலகின் மிகப்பெரியதாக உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 460 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சீனாவுக்கு சொந்தமாக குறைந்தது 85 ரோந்துக் கப்பல்கள் உள்ளன. அதில், பல எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை தாங்கி செல்லும் திறனை கொண்டுள்ளது. கடற்படையை சீனா பலப்படுத்தி வருவது பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என புவிசார் அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.