சிறுமியின் பாதி மூளையின் செயலாக்கத்தையே நிறுத்திய மருத்துவர்கள் -அதிசயம் ஆனால் உண்மை!
மூளையின் ஒரு பகுதி செயலாக்கத்தை நிறுத்திய மருத்துவர்களின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி பாதிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிறிஸ்டல் பாட்லி. இவரது மகள் பிரையன்னா பாட்லி(6). இவருக்கு திடீரென் வலிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பக்கவாதமும் ஏற்பட்டு நடக்க முடியாத வகையில் கால்கள் மடங்கியுள்ளன.
உடனே கலிஃபோர்னியா லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து "ராஸ்முஸ்ஸென்'ஸ் என்சஃபலைட்டிஸ்" எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவர்கள் சாதனை
இதனால், அவரது மூளையின் ஒரு பாகம் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. எனவே, இதற்கு சிகிச்சையாக ஒரு பக்க மூளையின் செயலாக்கத்தை நிறுத்துவதுதான் நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அதனையடுத்து, டாக்டர். ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் பல துறை மருத்துவர்களும் பங்கேற்றனர். தற்போது, சிறுமி நலமாக உள்ளார்.
மருத்துவ தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்த முடிவது வியக்கவைக்கிறது.