மகளுக்கு ஊரை கூட்டி பிரம்மாண்ட திருமணம்.. அதே சொகுசு ஹோட்டலில் உயிரை மாய்த்துக் கொண்ட பெற்றோர் - சோகம்!

Kerala Death
By Vinothini Sep 09, 2023 05:25 AM GMT
Report

தொழிலதிபர் ஒருவர் தந்து மகளுக்கு திருமணம் நடத்தி வைத்த அதே ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகதன் (71), வெளிநாட்டில் பிசினஸ் செய்துவந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் செட்டில் ஆனார். இவரது மனைவி சுனிலா(70), இவர்களுக்கு உத்தரா என்ற ஒரே மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருவனந்தபுரத்திலுள்ள சொகுசு ஹோட்டலில் வைத்து, ஆடம்பரமாகத் திருமணம் நடத்திவைத்தார்.

businessman-and-his-wife-dead-in-kerala

இவர்கள் கடந்த 26-ம் தேதி தனது வீட்டில் பராமரிப்பு பணி நடப்பதாக கூறி ஒரு 10 நாட்களுக்கு அதே ஹோட்டலில் அறை எடுத்து தாங்கினர். அவர்களது மகள் உத்தராவும் பார்க்க சென்றிருந்தார், அதன்பிறகு நேற்று முன்தினம் மதியம் அறையை சுத்தம் செய்வதற்காக பணியாளர் சென்றபொழுது அங்கு துணிகள் போடும் கம்பியில் ஒரே துப்பட்டாவில் சுகதனும் அவரின் மனைவியும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில், பணியாளர் சென்று நிர்வாகியிடம் கூறினார், போலீசுக்கு தகவல் தெரியவர விசாரணை நடத்தி வந்தனர். அதில், சுகதன் மஸ்கட் நாட்டில் பிசினஸ் செய்து வந்திருப்பதும், பின்னர் அங்கிருந்து ஊருக்கு வந்தவர் சென்னையில் உதிரிபாகங்கள் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

businessman-and-his-wife-dead-in-kerala

தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தனது பங்களா வீட்டை விற்றும், கடன் வாங்கியும் கடந்த ஜனவரி மாதம் மகள் உத்தராவுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். பின்னர், பண நெருக்கடியில் இருந்த அவர்கள் வாடகை வீட்டில் தங்கி வந்தனர்.

தற்பொழுது தனது மகளுக்கு பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைத்த அதே ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.