கையில் குடையை பிடித்துக்கொண்டே பஸ் ஓட்டும் அரசு பேருந்து டிரைவர் - வைரலாகும் வீடியோ!
பேருந்து ஓட்டுநர் ஒருவர் குடை பிடித்துக்கொண்டே பஸ் ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் குடையை பிடித்து கொண்டே பேருந்தை ஓட்டினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்களில் ஒருவர் இதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது தற்பொழுது வைரலாகி வருகிறது, தற்பொழுது மழைக்காலம் என்பதால் அரசு பஸ்ஸில் மழை தண்ணீர் ஒழுகியது.
தண்ணீர் ஒழுகும் பஸ்
இந்நிலையில், பஸ் ஓட்டுநர் நினைந்துவிடக் கூடாது என்று குடை பிடித்து கொண்டு பேருந்தை இயக்கியுள்ளார். மழை நீர் ஒழுகிய பஸ் கட்சிரோலி அகேரி டெப்போவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
यह वीडियो गढ़चिरौली के अहेरी का है !
— Mumbai Congress (@INCMumbai) August 25, 2023
बारिश होने पर बस की छत टपकने से यह बात सामने आई है कि ड्राइवर बस में छाता लेकर बस चला रहा था!
यह हालत होगई है महाराष्ट्र के @msrtcofficial बस सेवा की, यात्रियों की सुरक्षा अब उपरवाले के भरोसे है!
वीडियो: @mumbaitak #Maharashtra #Gadchiroli pic.twitter.com/z5evosrfk6
இதுபோன்ற மோசமான நிலையில் உள்ள பஸ்கள் இயக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோடரிக்கை விடுத்து வருகின்றனர்.