பவுலர்கள் இல்லனா ஒன்னுமில்ல; ஆனால், அவர்களைத்தான் ரசிகர்கள் கொண்டாடுறாங்க - பும்ரா
இந்திய ரசிகர்கள் எப்போதுமே பேட்ஸ்மேன்களை அதிகமாக கொண்டாடுவதாக பும்ரா தெரிவித்துள்ளார்.
பும்ரா
கடந்த 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் பும்ரா இந்தியாவின் முதன்மை பவுலராக முன்னேறியுள்ளார்.
தற்போது முன்னாள் ஐபிஎல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பும்ரா அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நமது நாடு பெரிய பேட்ஸ்மேன்களை விரும்பும் என்பதை நான் நியாயமாக புரிந்து கொள்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்த வரை பவுலர்கள் தான் விளையாட்டை நடத்துகின்றனர்.
மகத்தான ஃபார்மட்
நான் டெஸ்ட் போட்டிகள் தொலைக்காட்சியில் அதிகமாக காண்பிக்கப்பட்ட தலைமுறையில் இருந்து வந்தவன். எனவே என்னை பொறுத்த வரை இப்போதும் டெஸ்ட் போட்டிகள் தான் மகத்தான ஃபார்மட். ஏனெனில் ஒருவேளை நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினால் அது ஒருநாள்,
டி20 போன்ற மற்ற வகையான கிரிக்கெட்டையும் பார்த்துக் கொள்ளும் என்று கருதுகிறேன். அதே சமயம் நோ-பால் போட்டால் ஃபிரீ ஹிட் என்ற நடைமுறை அகற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.