மனநலம் பாதிக்கப்பட்ட அக்காவுடன் தண்ணீர் தொட்டியில் தம்பி செய்த காரியம்... அவதானித்த தாய்க்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

mother sister brother kill Coimbatore
By Jon Mar 18, 2021 03:21 PM GMT
Report

கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தண்ணீர் தொட்டியில் குதித்து அக்காள், தம்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவருடைய மனைவி அலமேலு (55).

இவர்களுக்கு பிரீத்தா (30) என்ற மகளும் அருண்குமார் (25) என்ற மகனும் இருந்தனர். இதில் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்த நிலையில், அக்கா பிரீத்தா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரன் இறந்துள்ளார். மகன் அருண் பல இடங்களில் கடன் வாங்கி புதிதாக வீடுகட்டியுள்ளார். குறித்த கடனை அடைக்கமுடியாமலும், அக்காவிற்கு சிகிச்சை அளிக்க முடியாமலும் திணறியுள்ளார்.

கடன்தொல்லை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டால் அக்காவை யார் கவனித்துக்கொள்வார் என்று கேள்வி எழவே, அக்காவுடன் சேர்த்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் தாய் அலமேலு வெளியே சென்ற நிலையில், அருண்குமார் தனது வீட்டின் வளாகத்தில் உள்ள 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் அக்காளுடன் உள்ளே இறங்கி, இரும்பால் ஆன மூடியை மூடிவிட்டு உள்ளே குதித்துள்ளார். சிறிதுநேரம் கழித்துவிட்டு வீடு திரும்பிய தாய் அலமேலு, இருவரையும் காணாமல் பல இடங்களில் தேடியுள்ளார்.

பின்பு அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் அருண்குமார், பிரீத்தா ஆகியோர் பிணமாக கிடப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் 2 பேரும் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இருவரின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், அருண்குமார் எழுதிய கடிதத்தினையும் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், கடன் அதிகமாக இருப்பதால், அக்காளுக்கு சிகிச்சை கொடுக்க முடியவில்லை. எனவே அப்பா சென்ற இடத்துக்கே நாங்களும் செல்கிறோம் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. தொடர்ந்து இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.