உடன் பிறந்த சகோதரை திருமணம் செய்த தங்கை - அதிர்ச்சி பின்னணி!
விசா வாங்குவதற்காக சகோதரன்-சகோதரி திருமணம் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய விசா
மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர்கள் சகோதரன் - சகோதரி. இதில், சகோதரருக்கு ஆஸ்திரேலிய விசா உள்ளது. தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால், மற்றவருக்கு விசா கிடைப்பது அங்கு எளிது. இதனால், இருவரும் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அருகிலுள்ள பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். அதன்பின், அவர் தனது கணவருடன் ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். விசாவும் வாங்கி ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
திருமணம்
இதற்கிடையில், இரு நாட்டு சட்ட அமைப்புகளையும் அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல் கிடைக்காததால் கண்டறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெய் சிங் கூறியதில்,
சகோதரன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், சகோதரி போலி ஆவணங்களை தயாரித்ததாகவும், அவர்கள் முதலில் ஒரு குருத்வாராவிடமிருந்து திருமணச் சான்றிதழைப் பெற்று, துணைப் பதிவாளரிடம் பதிவு செய்ததாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
குடியேற்ற ஊழலில் அவரது சகோதரர் மற்றும் சகோதரி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.