மாலை மாற்றிக்கொண்ட ஜோடி - மேடையிலேயே விழுந்து உயிரை விட்ட மணப்பெண்!

Uttar Pradesh Marriage Death
By Sumathi Dec 05, 2022 08:28 AM GMT
Report

திருமணத்தின் போது மேடையிலேயே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

உத்திர பிரதேசம், மஹிலாபாத் பாத்வனா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால். இவரது மகள் ஷிவாங்கி ஷர்மா(21). இவருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது, மணமேடையில் மாலைகளை மாற்றியதும் புகைப்படம் எடுப்பதற்காக நின்றிருந்தபோது திடீரென ஷிவாங்கி ஷர்மா மயங்கி விழுந்துள்ளார்.

மாலை மாற்றிக்கொண்ட ஜோடி - மேடையிலேயே விழுந்து உயிரை விட்ட மணப்பெண்! | Bride Who Passed Away Wedding Day Shocking

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மணப்பெண் உயிரிழப்பு

இதற்கிடையில், கடந்த சில நாட்களாகவே ஷிவாங்கி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து அதிலிருந்து குணமானவருக்கு திருமணம் நெருங்கும் மீது மீண்டும் உடல்நிலை மோசமாகியுள்ளது.

இந்நிலையில், இவரது இறப்பினை காவல்துறையிடம் தெரிவிக்காமலேயே குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர். ஆனால் சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.