அழுத்தம் கொடுக்கும் CSK உரிமையாளர்கள்..? உண்மை ஓப்பனாக சொன்ன பிராவோ
சென்னை அணி வீரர்களுக்கு அணியின் உரிமையாளர்கள் அழுத்தம் கொடுப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.
சென்னை அணி
5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக இருக்கும் சென்னை அணிக்கு வெகுவாக அழுத்தம் ஏற்படுவது சகஜம் தான். நடப்பு சாம்பியனாக சென்னை அணி இம்முறை விளையாடவுள்ளது.
ஆனால், அது அணியின் உரிமையாளர்களிடம் இருந்து வந்தால், அது அணி வீரர்களுக்கு பெரும் நெருக்கடியாக ஒன்றாக மாறிவிடும். சென்னை அணியில் வீரர்களுக்கு அணி நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாக சில காலமாக கருத்துக்கள் எழுந்து வருகின்றது.
அணியில் அழுத்தமா..?
இது தொடர்பாக இது வரை எந்தவித வீரரும் பேசாமல் இருந்த நிலையில், அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பிராவோ இது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, அணியில் வெளியில் இருந்தோ, உரிமையாளர்களிடம் இருந்து வீரர்களுக்கு அழுத்தமே கிடையாது என குறிப்பிட்டு, வீரர்களை அவர்களாகவே இருக்க சென்னை அணி அனுமதிப்பதாக கூறி, அதுவே அணியின் அழகு என்ற அவர் குறிப்பிட்டுள்ளார்.