மூளைக் கட்டிக்கு அறுவை சிகிச்சையின்போது பாட்டு பாடிய நபர் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Jun 08, 2022 09:59 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

பாட்டுப் பாடிய நபர்

அந்த வீடியோவில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜ்குமார் பாண்டே என்ற நோயாளிக்கு மூளைக் கட்டிக்கு மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது, அவர் அரை மயக்கத்தில் இருந்தபோது பாட்டு பாடுகிறார். அவர் பாட்டு பாடியதை அங்கிருந்த மருத்துவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மூளைக் கட்டிக்கு அறுவை சிகிச்சையின்போது பாட்டு பாடிய நபர் - வைரலாகும் வீடியோ | Brain Tumor Surgery Viral Video

வைரல் வீடியோ

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மூளைக் கட்டி என்பது மக்களைக் கொல்லும் ஒரு பயங்கர நோயாகும். இதனால், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன் பதற்றமடைவார்கள். ஆனால் ராஜ்குமாரின் தைரியத்தை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் முழு அறுவை சிகிச்சையின் போது ராஜ்குமார் கஜல்களை மருத்துவர்களுக்கு விவரித்து பேசியுள்ளது ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.