காதலியின் உல்லாச காட்சிகளை கணவருக்கு அனுப்பிய EX காதலன் - திருமணத்தின் மறுநாளே ஷாக்!
காதலியுடன் இருந்தபோது எடுத்த அந்தரங்க காட்சிகளை காதலன் அவரது கணவருக்கு அனுப்பியுள்ளார்.
காதலன் செயல்
கர்நாடகா, கித்தூர் டவுன் நெசவாளர்கள் காலனியில் வசித்து வருபவர் முத்துராஜ்(24). இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளம்பெண்ணை 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
அப்போது இருவரும் தனிமையில் இருக்கும் காட்சிகளை முத்துராஜ் தனது செல்போனில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து, முத்துராஜ், தனது காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதற்கு காதலி காரணம் கேட்டபோதும் சரியாக பதில் கூறாமல் இருந்துள்ளார்.
பெற்றோர் தர்ணா
எனவே அந்தப் பெண் பெற்றோர் கூறியபடி கானாப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், அந்த மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்த முத்துராஜ் காதலியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை அவர்களிடம் காட்டியுள்ளார். மேலும், வீடியோவை வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்து பெண்ணை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். உடனே, அந்தப் பெண் காதலன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது, முத்துராஜ் தனது காதலியையும் அவரது பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டிற்குள் சென்று தாழிட்டுள்ளார்.
இதனால் காதலியும் பெற்றோரும் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து போலீஸில் புகாரளித்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil
