வாட்ஸ்அப்பில் பரவிய அந்தரங்க வீடியோ; பதறிய தம்பதியினர் - 7 பேரைத் தேடும் போலீசார்!

Tamil nadu Crime Kanyakumari
By Jiyath Aug 24, 2023 12:52 PM GMT
Report

வீட்டில் ரகசிய கேமரா வைத்து தம்பதியினரின் அந்தரங்க வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்.

தம்பதியின் அந்தரங்க வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதி ஒன்று நெருக்கமாக இருக்கும் வீடியோவாட்ஸ்அப்பில் பரவியுள்ளது. இதுகுறித்து அந்த தம்பதியிடம் அவர்களின் உறவினர் ஒருவர் கூறியிருக்கிறார்.

வாட்ஸ்அப்பில் பரவிய அந்தரங்க வீடியோ; பதறிய தம்பதியினர் - 7 பேரைத் தேடும் போலீசார்! | 7 Persons Who Recorded Couple Private Videos

ஆனால் அது வேறு யாராவதாக இருக்கும் என்று தம்பதியினர் கூறியதை அடுத்து, உறவினர் அந்த வீடியோவை அவர்களிடம் காண்பித்துள்ளார். அந்த வீடியோவில் அந்த தம்பதியினர் தங்களது பெட்ரூமில் தனியாக இருப்பது பதிவாகியிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர், தங்களது பெட்ரூமில் தேடிப்பார்த்தபோது, வீட்டின் வெண்டிலேஷனில் தேங்காய் நார் உள்ளிட்டவை இருந்துள்ளது.அந்த பகுதியில் இரவு நேரத்தில் புளூடூத் கேமராவை வைத்து, தங்களின் அந்தரங்க காட்சிகள் எடுக்கப்பட்டதைக் கண்டறிந்த அந்தத் தம்பதி, அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

போலீசார் விசாரணை

அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் மாலை நேரத்தில் வீட்டின் வென்டிலேஷன் வழியாக பெட்ரூம் காட்சிகள் பதிவாகும் வகையில் புளூடூத் கேமராவை வைப்பது வாடிக்கையாக இருந்திருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் கணவனும் மனைவியும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை தங்கள் செல்போனில் பார்த்ததுடன், அதை வாட்ஸ்அப் மூலம் பிறருக்கும் பரப்பியிருக்கின்றனர்.

வாட்ஸ்அப்பில் பரவிய அந்தரங்க வீடியோ; பதறிய தம்பதியினர் - 7 பேரைத் தேடும் போலீசார்! | 7 Persons Who Recorded Couple Private Videos

களியக்காவிளை மற்றும் கேரளத்தின் பல பகுதிகளிலும் அந்த வீடியோக்கள் பரவியிருக்கின்றன.  இந்நிலையில் இது அந்த தம்பதியினரின் கவனத்திற்கு வந்ததையடுத்து, நாகர்கோவிலுள்ள எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரில் வீடியோக்களை பரப்பியதாக 7 பேரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 'அந்தக் கும்பல் இது போன்று அந்தரங்க வீடியோக்களை எடுத்து விற்பனை செய்கிறார்களா, அல்லது வேறு நோக்கம் ஏதாவது உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.