காதலியை கவனிக்க யாரும் இல்லை - மனு தாக்கல் செய்த காதலனுக்கு ஜாமீன்..!

Delhi
By Thahir Jun 11, 2022 09:40 AM GMT
Report

கர்ப்பிணி காதலியை கவனிக்க யாரும் இல்லை எனக் கூறி மனுத்தாக்கல் செய்த காதலனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் தொடர்பு 

டெல்லியைச் சேர்ந்த நபர் உளவுத்துறை மற்றும் “ரா” அமைப்பின் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்ததாகவும்,பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காதலியை கவனிக்க யாரும் இல்லை - மனு தாக்கல் செய்த காதலனுக்கு ஜாமீன்..! | Boyfriend Seeking Bail To Take Care Of Girlfriend

இந்த வழக்கில் அவரது காதலியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவ் இன்' முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த பெண்ணுக்கும் இந்த வழக்கில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அந்த பெண்ணுக்கு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் கேட்ட காதலன்

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனது காதலியை கவனிக்க யாரும் இல்லை.தனது காதலி 95 வயதான தாத்தா,பாட்டியுடன் வசித்து வருகிறார்.

தனது காதலியின் பேறுகாலம் நெருங்கி வருவதால் தனக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

அப்போது நீதிபதிகள் தாத்தா,பாட்டியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நிறைமாத கர்ப்பிணியான பெண்ணுக்கு வேறு துணை இல்லாத காரணத்தினால் சிறையில் உள்ள அந்த பெண்ணின் காதலனுக்கு 3 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

காதலியை கவனிக்க யாரும் இல்லை - மனு தாக்கல் செய்த காதலனுக்கு ஜாமீன்..! | Boyfriend Seeking Bail To Take Care Of Girlfriend

பிணைத் தொகையாக 30 ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டு செல்லும்படி நீதிபதி பூனம் பம்பா உத்தரவிட்டார். விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்,

தனது மொபைல் எண்ணை விசாரணை அமைப்பிடம் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.