என் இறுதி ஊர்வலத்துக்கு வா..வீடியோவில் பேசும்போதே உயிரைவிட்ட இளைஞர் - காதலிக்காக உருக்கம்!

Bengaluru Death
By Sumathi Aug 14, 2023 10:20 AM GMT
Report

காதலிக்கு, இளைஞர் ஒருவர் சாகும் தருவாயில் வீடியோ வெளியிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

காதலன் இறப்பு 

பெங்களூரு அடுத்த நொளமங்கலா பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிரண்(22). இவரை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் கடித்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் ரேபிஸ் தொற்று தாக்குதலுக்கு ஆளானார்.

என் இறுதி ஊர்வலத்துக்கு வா..வீடியோவில் பேசும்போதே உயிரைவிட்ட இளைஞர் - காதலிக்காக உருக்கம்! | Boy Friend Death Making Live Video Bengaluru

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, தனது காதலிக்கு உருக்கமாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “ஹாய் பங்காரி. உங்க அப்பா சொன்னது போலவே நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.

உருக்கமான செயல்

உங்கள் அனைவரையும் விட்டு செல்கிறேன். உனக்குப் பிறக்கும் குழந்தைக்கு என் பெயரை வைக்க முடியுமா? தயவு செய்து என்னுடைய இறுதி ஊர்வலத்திற்கு வா. உன் தங்கையையும் அழைத்து வா. உங்கள் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள்” என்று பேசிக்கொண்டிருக்கையிலேயே திடீரென வலிப்பு வந்து உயிரிழந்தார்.

முன்னதாக காதலித்த பெண்ணுக்கு மோதிரமும் வாங்கித் தந்துள்ளார். இதனை அவரது வீட்டில் கடுமையாக எதிர்த்துள்ளனர். எனவே, பெண் வீட்டில் ஏதோ செய்து கிரணை கொன்றுவிட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், வெளியான இந்த உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது.