ஆட்டோ நிறைய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகள், போலீஸ் அதிரடி - G20 மாநாட்டில் பரபரப்பு!

Delhi India
By Vinothini Sep 09, 2023 04:52 AM GMT
Report

G20 உச்சி மாநாட்டில் ஆட்டோ நிறைய வெடிபொருட்கள் இருக்கும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

G20 மாநாடு

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும், 18வது ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் பலர் டெல்லியில் குவிந்துள்ளனர்.

bomb-threat-in-g20-summit

இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் டெல்லி போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் என 1.30 லட்சம் பேர் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 45 ஆயிரம் பேர் நீல உடையில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

இந்த சமயத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றதாக ஒரு ஆட்டோ படத்துடன் டுவிட்டர் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டார்.

போலீஸ் அதிரடி

இந்நிலையில், அதிர்ச்சியடைந்த போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்பகுதி முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்தனர், பின்னர் இந்த தகவலை பதிவிட்டவரை தேடி பிடித்தனர். அதில் விசாரணையில், டெல்லியில் உள்ள பால்ஸ்வா டெய்ரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான குல்தீப் ஷா என்றும், அந்த ஆட்டோ, எஸ்எஸ்என் பூங்கா பகுதியில் வசிக்கும் குர்மீத் சிங் என்பவற்றின் ஆட்டோ. அதனை ஓட்டுபவர் ஹர்சரண் சிங்(48) என்ற ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

bomb-threat-in-g20-summit

அப்பொழுது இந்த ஆட்டோவை சாந்தினி சவுக்கிற்கு துணிகளை ஏற்றி சென்று வந்துள்ளனர். இந்த குல்தீப் ஷா என்பவருக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கு இடையே ஆட்டோ நிறுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

குல்தீப் ஷா தனது வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார், அவர் பலமுறை சொல்லியும் கேட்காமல் நிறுத்தியதால் குல்தீப் ஷா அந்த ஆட்டோவை புகைப்படம் எடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குல்தீப் ஷா சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், மாநாட்டின்போது தவறான செய்தியை பரப்பியதால் குல்தீப் ஷாவை கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.