உங்கள் நாக்கில் இப்படி இருந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்.. உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்துமாம்!

health boy man
By Jon Feb 02, 2021 01:14 PM GMT
Report

நமது உடலில் பல மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில மாற்றங்கள் ஆரம்பத்தில் கவனிக்காமல் இருப்பதினால் தான் நோய்களினால் பாதிப்படைக்கிறோம். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், அது பாமர மக்களுக்கு இன்னும் கொண்டு செல்லபடவில்லை. விஞ்ஞான வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்துவதாக கட்டாயம் இருத்தல் வேண்டும்.

அப்படி இல்லையென்றால் உலகில் ஏற்படும் எந்த வகை மாற்றத்தையும் அறியாமலேயே மக்கள் இருந்து விடுவர். அந்த வகையில் உடலின் செயல்பாடும் அடங்கும்.

மருத்துவத்துறையில் எவ்வளவோ வளர்ச்சிகள் வந்தாலும் அவை பெரும்பாலான மக்களுக்கு போய் சேருவதில்லை. குறிப்பாக புற்றுநோய் பற்றிய எந்த விழிப்புணர்வும் மக்களிடம் இருப்பதில்லை.

இந்த பதிவில் நாக்கில் ஏற்படும் அரிய வகை புற்றுநோய் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். பெரிதும் பாதிக்கும் நோய் சில முக்கிய ஆராய்ச்சிகள் புற்றுநோயை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறுகின்றது. இன்று அதிகம் பெருகி வரும் நோய்களில் இந்த புற்றுநோய் முதன்மையான இடத்தில இருக்கின்றதாம்.

எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முடிந்தளவிற்கு எளிதாக குணப்படுத்தி விடலாம். ஆனால், இந்த புற்றுநோய் அப்படி கிடையாது. பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது.

இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். அதாவது, இவை நம் உடலில் உருவாக தொடங்கும் போது நமக்கு இதனை பற்றிய அறிகுறி தென்படாதாம். பல நாட்களுக்கு பிறகே இவை உடலில் வேறு சில அறிகுறிகளை தந்து உணர்த்துமாம்.

நாக்கு புற்றுநோய் எப்படி..? புற்றுநோய் பல வகையாக உள்ளன. அவற்றில் ஒரு வகைதான் இந்த நாக்கு புற்றுநோய். இவை நாக்கில் புற்றுநோய் செல்களை உருவாக்கி கட்டிகளாக மாறும். இது கிட்டத்தட்ட தொண்டை புற்றுநோய் போன்றதுதான்.

சிலருக்கு நாக்கின் மேல் புறத்திலும், சிலருக்கு நாக்கின் உட்புறத்திலும் இவை ஆரம்ப நிலையில் வளர கூடும். நாக்கு புற்றுநோயின் அறிகுறிகள் நாக்கு புற்றுநோய் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா இல்லையா..? என்பதை இந்த அறிகுறிகள் உணர்த்துகின்றன.

நாக்கில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுகள் இருக்கும். நாக்கில் வீக்கம் வாய் உட்புறத்தில் சிறிது சிறிது புண்கள் நாக்கில் இருந்து ரத்தம் வடிதல் உணவு சாப்பிடும்போது வலி ஏற்படுவது.

எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதற்கென்று ஒரு சில நிலைகள் எப்போதும் மருத்துவர்களால் கருதப்படும். இந்த நாக்கு புற்றுநோயிலும் அப்படி சில நிலைகள் உள்ளன. நாக்கில் கட்டி உருவாக தொடங்கி விட்டால் அதனை T1 நிலை என்பர். இதுவே அவை முற்றி பெரியதாகி விட்டால் T4 நிலை என்பர்.

இன்னும் புற்றுநோய் பரவவில்லை என்றால் N நிலையாகும். உடலில் வேறு உறுப்புகளிலும் இந்த புற்றுநோய் பரவி உள்ளதென்றால் அதனை M நிலை எனலாம். புற்றுநோயிக்கு காரணம்..? மது அருந்துதல் வாய்வழி உறவு கொள்ளுதல் வெற்றிலை போடும் பழக்கம் பாலியல் ரீதியான நோய் இது சற்றே கொடிய வகை புற்றுநோயாக கருதப்படுகிறது.

உங்கள் வாயில் புற்றுநோயிற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இந்த வகை புற்றுநோயை ஆரம்ப நிலையில் மட்டுமே குணப்படுத்த இயலும். இல்லையேல் உயிர் இழப்பு நேர கூடும்.

அத்துடன், மருத்துவர்கள் கூறும் வழி முறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். சீரான ஆரோக்கியம் உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தி இருந்தாலே அது எந்த வகை நோய்களையும் உடலில் ஏற்படுத்தாது.

வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் போதே அது பலவித நோயிற்கான வாசலாக நம் உடல் மாறுகிறது. எனவே, அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவை உண்டு மகிழ்வான வாழ்வை நலமோடு வாழுங்கள் நண்பர்களே.