குழந்தை சாப்பிட்ட போண்டாவில் பிளேடு - வாயில் சிக்கிய கொடூரம்!
குழந்தை சாப்பிட்ட போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போண்டாவில் பிளேடு
சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவரின் உறவினர்,
அந்த உணவகத்தில் இருந்து தனது குழந்தைக்காக போண்டா வாங்கிச் சென்றுள்ளார். தொடர்ந்து குழந்தை போண்டாவை சாப்பிடும் போது, அதிலிருந்த பிளேடு துண்டு ஒன்று வாயில் சிக்கியுள்ளது.
[Z667EOB
ஓட்டலுக்கு நோட்டீஸ்
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்களுடன் சென்று ஓட்டலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் உணவகத்தின் உரிமையாளர்கள் சரியாக பதிலளிக்காததால், உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனே, விரைந்து வந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். உணவுகளின் தரம் குறித்து அறிய மாதிரி உணவுகள் சேகரிப்பட்டு ஆய்வகங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், , பிளேடு துண்டு தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.