படர்தாமரை உடலுக்கு கேடு.. பாஜகவின் தாமரை நாட்டிற்கே கேடு - கொந்தளித்த கருணாஸ்!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் நிலக்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.
சுட்ட வடைகள்
படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு. எனவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.