உங்கள் சகோதரியாக, சித்தியாக உங்களுக்காக 100 சதவீதம் பாடுபடுவேன்- ராதிகா பேச்சு!
என்னால் 100 சதவீதம் உங்களுக்காக பாடுபடுவேன் என பிரச்சாரத்தில் பா.ஜனதா வேட்பாளர் ராதிகா கூறியுள்ளார்.
ராதிகா சரத்குமார்
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் மணிக்கூண்டு தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராதிகா சரத்குமார் தேர்தல் பரப்புரையாற்றினார்.
அப்போது அவர், காமராஜர் பிறந்த மண்ணில் பிரசாரம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு நாள் தீவிர அரசியலுக்கு வராமல் இருந்தேன். 100 சதவீதம் என்னால் நேரம் ஒதுக்க முடியும் என்ற நிலையில் தற்போது எனது கணவர் நாட்டாமைதான் உன்னால் முடியும் என நம்பிக்கை கொடுத்தார்.
நான் அந்த நம்பிக்கையில் என்னால் 100 சதவீதம் உங்களுக்காக பாடுபடுவேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.
100 சதவீதம் பாடுபடுவேன்
உங்கள் சகோதரியாக, சித்தியாக உங்களுக்காக பாடுபடுவேன். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார். நானும் வெற்றி பெற்றால் உங்களுக்காக அவரிடம் சொல்லி உங்கள் குறைகளை போக்குவதற்கு பாடுபடுவேன்.
நான் இங்கு தான் பேராலி ரோட்டில் இருக்கிறேன். நான் இங்கிருந்து செயல்படுவேன். 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் எந்த மந்திரி மீது ஊழல் புகார் உள்ளதா? இங்கு மாநிலத்தில் அமைச்சர்கள் ஜெயிலுக்கும் போவதும் வருவதுமாக அம்மா வீட்டுக்கு போய்விட்டு வருவது போல் வருகிறார்கள்.
பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் அந்த திட்டங்கள் சில பேருக்கு தான் கிடைக்கிறது. சில பேருக்கு வரவில்லை.
நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க பாடுபடுவேன்.
தாமரைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூரியுள்ளார்.