திமுக MLA வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர்..குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார் !!

Tamil nadu Kanchipuram DMK BJP
By Karthick Nov 04, 2023 10:55 AM GMT
Report

பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்த காஞ்சிபுர சட்டமன்ற உறுப்பினரின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவதூறு கருத்து 

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திமுகவின் சிவி எம்பி.எழிலரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க தொகுதிக்கு உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றார். 

bjp-party-workers-arrested-kanchipuram-mla-house

அதன் பங்காக, கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் நியாய விலைக் கடையை திறந்து வைக்க சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மகளிர் அரசின் திட்டமான மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் தங்களுக்கு இன்னும் வரவில்லை என எம்.எல்.ஏ'வை முற்றுகையிட்டனர்.

பாஜகவினர் கைது

அப்போது மக்களின் கேள்விக்கு பதிலளித்த எழிவரசன், பாரத பிரதமர் மோடி மற்றும் பாஜக நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் அம்மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் எம்.எல்.ஏ எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

மருத்துவமனையில் முதல்வர் முக ஸ்டாலின்..!! திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு!!

மருத்துவமனையில் முதல்வர் முக ஸ்டாலின்..!! திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு!!

அதனை தொடர்ந்து, எழிலரசன் இல்லத்தை இன்று காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கேஎஸ்.பாபு தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்பிற்காக அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

bjp-party-workers-arrested-kanchipuram-mla-house

இதன் காரணமாக இரு தரப்பிற்கும் சற்று வாக்குவாதம் ஏற்பட அவர்களை கைது செய்ய முயன்ற போது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், பாஜகவினர் அங்கிருந்து களைந்து செலுத்த நிலையில், அவர்களை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.