எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பம் - முதல்வரை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை!

M K Stalin DMK BJP K. Annamalai
By Vidhya Senthil Feb 13, 2025 02:22 AM GMT
Report

தமிழ் மொழியைச் சொல்லி அரசியல் செய்​யும் திமுக இதற்கு வெட்​கப்பட வேண்​டும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 திமுக 

சென்னை திரு​வான்​மியூரில் தமிழக பாஜக சார்​பில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்​கூட்டம் நேற்று நடைபெற்​றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,மாநில துணைத் தலைவர்கள் கரு.நாக​ராஜன், சக்கர​வர்த்தி, நாராயணன் திருப்​பதி, அமர்​பிரசாத் ரெட்டி தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பம் - முதல்வரை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை! | Bjp Leader Annamalai Slams Cm Stalin

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை,’இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்​டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், தமிழ்நாட்டில் குறைந்​த​பட்சம் 60 லட்சம் பேர் பயனடைகின்​றனர்என்று கூறினார்.

அரசு பள்ளியின் அவலம் .. சினிமா டயலாக் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி -அண்ணாமலை!

அரசு பள்ளியின் அவலம் .. சினிமா டயலாக் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி -அண்ணாமலை!

 அண்ணாமலை

தொடர்ந்து பேசியவர்,’’தாய்​மொழி​ தமிழில் தமிழக மாணவர்கள் பின்​தங்கி உள்ளதாக ஓர் ஆய்வறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.தமிழ் மொழியைச் சொல்லி அரசியல் செய்​யும் திமுக இதற்கு வெட்​கப்பட வேண்​டும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், உலக நாடுகள் வியக்கும் வகையில் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.

எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பம் - முதல்வரை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை! | Bjp Leader Annamalai Slams Cm Stalin

அனைத்து இடங்களிலும் மரியாதை இருக்கும் தலைவர் பிரதமர் மோடி போல் ஆளுநரும், அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம் என்று கூறினார்.