50-க்கும் அதிகமான வீடுகள் இடிப்பு; திமுகவின் அராஜகப் போக்கு - அண்ணாமலை கண்டனம்!

Tamil nadu BJP K. Annamalai
By Jiyath Jul 04, 2024 05:23 PM GMT
Report

திமுகவின் பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாக கண்டிப்பதாக பாஜக மாநில தலைவர் அணணமலை தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட S.V. G புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி,

50-க்கும் அதிகமான வீடுகள் இடிப்பு; திமுகவின் அராஜகப் போக்கு - அண்ணாமலை கண்டனம்! | Bjp Annamalai Condemned To Dmk Government

வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளித் துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு. பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், ஒதுங்க இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து அமர்ந்திருந்த, எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் கைது செய்து அத்து மீறியிருக்கிறது காவல்துறை.

தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்; நிர்வாகத் திறனற்ற திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்!

தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்; நிர்வாகத் திறனற்ற திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்!

வலியுறுத்தல் 

திருத்தணி யூனியன் பாஜக மண்டலத் தலைவர் திரு வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் திரு S.K.பாலாஜி ஆகியோரையும் கைது செய்திருக்கிறது திமுக அரசு. கும்மிடிப்பூண்டியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன், திருவள்ளூரில் ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.

50-க்கும் அதிகமான வீடுகள் இடிப்பு; திமுகவின் அராஜகப் போக்கு - அண்ணாமலை கண்டனம்! | Bjp Annamalai Condemned To Dmk Government

திமுகவின் இந்த பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.